Saturday, October 4, 2025

பாராசக்தி - Parasakti



யாதுமாகி நின்றாய் -காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம்--காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் --காளி
பொறிக ளைந்து மானாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.

இன்பமாகிவிட்டாய்-காளி
என்னுள்ளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால்-காளி
பிறிது நானுமுண்டோ?
அன்பளித்துவிட்டாய் -காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்ப நீக்கிவிட்டா ய் - காளி
தொல்லை போக்கிவிட்டாய்







ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி- ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம

1.கணபதிராயன் -அவனிரு
காலைப் பிடித்திடுவோம்
குணமு யர்ந்திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

2.சொல்லுக் கடங்காவே-பராசக்தி
சூரத் தனங்கலெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பராசக்தி
வாழியென் றேதுதிப்போம் (ஓம்சக்தி ஓம்சக்தி ஓ)ம்

3.வெற்றிவடிவேலன் -அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்;
சுற்றிநில்லாதேபோ!-பகையே!
துள்ளிவருகுதுவேல்(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

4.தாமரைப்பூவினிலே -சுருதியைத்
தனியிருந்துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்துடுவோம்( ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

5.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும்
பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே -குழலிசை
வண்ணம் புகழ்ந்திடுவோம்(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

6.செல்வத் திருமகளை-திடங்கொண்டு
சிந்தை செய்திடுவோம்
செல்வமெல்லாந்தருவாள்-நமதொளி
திக்கனைத் தும்பரவும்

பாரதியாரின் தெய்வப்பாடல்




ப்ரக்ருதிம் பரமாம் அபயாம் வரதாம் தமிழில்

 - 
Prakritim Paramam Stotram - In Sanskrit




No comments:

Post a Comment