



Guru Purnima - Yajnas -
5 types of Service - Sacrifices
in Ramakrishna Mission, Colombo 6



.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)





1.கணபதிராயன் -அவனிரு
காலைப் பிடித்திடுவோம்
குணமு யர்ந்திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
2.சொல்லுக் கடங்காவே-பராசக்தி
சூரத் தனங்கலெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பராசக்தி
வாழியென் றேதுதிப்போம் (ஓம்சக்தி ஓம்சக்தி ஓ)ம்
3.வெற்றிவடிவேலன் -அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்;
சுற்றிநில்லாதேபோ!-பகையே!
துள்ளிவருகுதுவேல்(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
4.தாமரைப்பூவினிலே -சுருதியைத்
தனியிருந்துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்துடுவோம்( ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
5.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும்
பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே -குழலிசை
வண்ணம் புகழ்ந்திடுவோம்(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
6.செல்வத் திருமகளை-திடங்கொண்டு
சிந்தை செய்திடுவோம்
செல்வமெல்லாந்தருவாள்-நமதொளி
திக்கனைத் தும்பரவும்


