Sunday, December 18, 2022

Kalutara - Sarada Devi 170th Birthday Celebration - 18-12-2022

Bairavi Aranery School




உபதேசங்கள்
பிரார்த்தனை செய்யும் பழக்கம் உள்ளவர்கள் மிக எளிதாகத் துன்பத்திலிருந்து விடுபடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் பாதிக்கப்படாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

* * *

குழந்தாய்! நம்பிக்கை என்பது அவ்வளவு கேவலமானதா, என்ன? நம்பிக்கை ஒன்றே முடிவான நிலையாகும். ஒருவனிடம் நம்பிக்கை இருக்குமானால் அவன் தன் குறிக்கோளை அடைந்ததற்குச் சமம்.

மந்திரம் உடலைத் தூய்மைப்படுத்துகிறது. இறைவனின் மந்திரத்தை உச்சரிப்பதால் மனிதன் தூய்மை அடைகிறான். மனித குரு மந்திரத்தைச் சீடனின் செவியில் ஓதுகிறார். கடவுள் அந்த மந்திரத்தின் ஆற்றலை விழித்தெழச் செய்கிறார்.

* * *

இறைவனின் திருநாமம் ஆலவிதைக்கு ஒப்பானது. காலப் போக்கில் அதிலிருந்து தெய்வீக மனநிலை, பக்தி, அன்பு, ஆன்மீக நிறைவு அனைத்தும் உண்டாகின்றன.



No comments:

Post a Comment