Thursday, April 25, 2024

வழிகாட்டல் தியானம் - Guided Meditation - 10 Minutes



Video

நமது வாழ்க்கையிலே அமைதி இருக்கிறது, ஆனந்தம் இருக்கிறது, நிறைவு இருக்கிறது. ஆனால் அது பூரணமாக இல்லை அவ்வப்பொழுது, கவலைகள் மனதை வாட்டுகின்றன. ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சலிப்புக்கள்,பெற்றார்,உறவினர்,நண்பர்களோடு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மனம் அமைதியை இழக்கின்றது. நாம் நினைப்பதை, எதிர்பார்ப்பதை, அவர்கள் செய்வதில்லை, நாம் நினைத்தபடி நடந்து கொள்வதில்லை. இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லாதது போல தெரிகிறது. ஆம் இது உண்மைதான். இதுதான் உலகத்தின் நியதி.

இன்பம், துன்பம், இரண்டும் கலந்துதான் உலக வாழ்க்கை.

இன்பத்தை அனுபவிப்பதை போல, துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் அதற்கு மனவலிமை தேவை. அந்த மன வலிமையை வளர்த்துக் கொள்வது வாழ்கையின் இன்றியமையாத அவசியமாகும்.

அதற்கான ஒரே வழி இறைவழிபாடு. இறை பக்தியை வளர்ப்பதன் மூலம், மனதிற்கு வலிமை பிறக்கிறது. வாழ்க்கை துன்பங்கள் லேசாகிவிடுகின்றன. அமைதி நிலைபெறுகின்றது.

இறைவழிபாட்டில் இரண்டு நிலைகள் உள்ளன.

  1. புற வழிபாடு, 
  2. அக வழிபாடு.

நாம் இப்போது ஆக வழிபாட்டிலே சிறிது ஈடுபடுவோம்.

01.ஆரம்ப ஏற்பாடுகள் ;

நேராக நிமிர்ந்து அமருங்கள். இமைகளை லேசாக மூடுங்கள்.உடலை இறுக்காதீர்கள் கைகளை கோர்த்த வண்ணம் அமருங்கள். உங்கள் உடல் முழுவதும் அமைதியில் ஆழ்ந்து இருப்பதை உணருங்கள். கை, கால்கள் உடல் முழுவதும் லேசாக உள்ளன. உங்கள் முகம் அமைதியில் மலர்ந்து இருக்கின்றது. உங்கள் உள்ளமும் எந்த சிந்தனையும் இன்றி சலனமற்று அமைதியாக உள்ளது. சாந்தி எங்கும் சாந்தி அந்த அமைதி நன்கு உணருங்கள் அந்த அமைதியில் அழ்ந்திருங்கள்…………………… (சில வினாடிகள் போகட்டும்)

02.ஓங்கார உபாசனை ;

இப்பொழுது ஓங்கார உபாசனை செய்வோம். முதலில் நன்றாக மூச்சை இழுக்கவும். பின்னர் மிக நிதானமாக ஓம் என்று கூறவும். ஓங்காரத்தை நீட்டிக் கூறவும். ஓம் என்று கூறுவதை இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். “ஓ”என்று ஆரம்பித்து சில வினாடிகள் சென்றபின் “ம்” என்று உதடுகளை மூடி நீட்டி கூறவேண்டும். இவ்வாறு பத்து தடவைகள் கூறவும். ஒவ்வொருவருக்கும் உங்கள் மனதில் அமைதி நம்புவதாக உணருங்கள். சில வினாடிகள் அந்த அமைதியில் ஆழ்ந்திருங்கள்.

03.சுவாசப்பயிற்சி ;

இப்பொழுது சுவாச பயிற்சி. உங்களது சுவாசத்தை கவனியுங்கள். சீரான ஓட்டம், சுவாசம் இரண்டு கட்டங்களில் நடைபெறுகின்றது. காற்று உள்ளே சென்று வெளியேறுகின்றது. இரண்டு நாசிகளில் ஊடாக சுவாசம் நடைபெறுகின்றது. சுவாசத்தை நன்கு கவனியுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒழித்து சுவாசத்தை கவனியுங்கள். நாசித் துவாரங்கள் வழியே காற்று உள்ளே செல்கிறது. நுரையீரல்களை அடைகின்றது. திரும்பவும் வெளியேறுகின்றது. ஒவ்வொரு சுவாசத்திற்கும் மனதில் அமைதி நிலை பெறுவதாக உணருங்கள். சில நிமிடங்களில் இந்த பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.

04. மானச பூசை;

இப்பொழுது மானச பூசை. உங்கள் இதயத்தில் பிரகாசமான ஒளியை காணுங்கள்.

எங்கும் ஒளி. கண்ணைப் பறிக்கும் ஒளி. அந்த ஒளியின் மத்தியில்

ஒரு அழகான தாமரை. நன்கு மலர்ந்த, நறுமணம் கொண்ட மலர். சிவப்பு நிறத்தில் நன்கு விரிந்த தாமரை. அதன் மென்மையான இதழ்களை உணருங்கள்…….

அந்த நறுமலரில், நீங்கள் தினசரி வழிபாடும் உங்கள் இஷ்ட தெய்வம் அமர்ந்திருப்பதை காணுங்கள்…. ஒளிபொருந்திய தேகம்……

அன்பும் அருளும் நிறைந்த திருமுகம்….. சச்சிதானந்த சொரூபம்…..

நம்முடைய இருப்பின், வாழ்க்கையின், அனைத்து இயக்கங்களுக்கும் காரணகர்த்தா… அவரை வணங்குங்கள்… மனதார வணங்குங்கள்… அன்போடு, பக்தி சிரத்தையுடன் வணங்குங்கள்… மலர் அஞ்சலி செய்யுங்கள்…

அந்த இறைவனை தியானம் செய்யுங்கள்… அவரது சாந்நித்தியத்தைப் பூரணமாக உணருங்கள். அவர் நமக்கு வெகு அண்மையில் உள்ளார். நம்மோடு எப்போழுதும் உள்ளார். அந்த இறை உணர்வில் சில வினாடிகள் மூழ்கியிருங்கள்….

பிரார்த்தனை செய்யுங்கள்… மனமுருகிப் பிரார்த்தியுங்கள்…

நிலையற்ற இந்த உலகின் பிடியில் இருந்து விலகப் பிரார்த்தியுங்கள்.

இறைவனது சாந்நித்தியம், அந்த இறை உணர்வு உங்கள் உள்ளும் புறமும் நன்கு வியாபித்து இருப்பதாக உணருங்கள்…

அந்த தூய்மையை அருளை உணருங்கள்……… (சில வினாடிகள்)

உங்கள் உடல் மனது தூய்மை அடைந்துள்ளது. மனது வலிமை பெற்றுள்ளது… கவலை, பயம், சோர்வு நீங்கி, மனம் தெளிவு, பெற்றுள்ளது.

நிறைவு;

இப்பொழுது உங்கள் மானச பூசையை நிறைவு செய்யுங்கள்.
ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி

********************************************************************

 மந்திரம்: ஓம்  -  சொல்லும் பொருளும்
சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள் 1.6.3(vii)

ஓங்காரம் முழுமுதற் பொருளின் வேறுபாடற்ற வடிவத்தைக் குறிப்பதுபோல், மற்ற மந்திரங்கள் அதே பிரம்மத்தின் தனித்தனியான இயல்புகளைக் குறிக்கின்றன. இவை எல்லாமே இறைவனைப்பற்றி தியானம் செய்யவும் உண்மையறிவை அடையவும் உதவியாக இருக்கின்றன.

Arguments Over Consciousness in the Age of AI - 

Concentration

How has all the knowledge in the world been gained but by the concentration of the powers of the mind? 
The world is ready to give up its secrets if we only know how to knock, how to give it the necessary blow. The strength and force of the blow come through concentration. 

There is no limit to the power of the human mind. The more concentrated it is, the more power is brought to bear on one point; that is the secret. 

The flow of this continuous control of the mind becomes steady when practiced day after day, and the mind obtains the faculty of constant concentration. –Swami Vivekananda





Video


Meditation Leads to Freedom


Swami Turiyananda writes about meditation as a source of freedom from the world-based emotions that hold us in bondage:

Happiness and misery alternate in this world. Have you ever seen anyone completely free from them? It is impossible; this world is made up of pairs of opposites. By meditating on the Atman one can get rid of them. This does not mean that there will be no happiness or misery, but by God’s grace they won’t be able to perturb one.

Thus, meditation is essential in overcoming the undependable nature of what the world offers and developing a more consistent and enduring sense of well-being.

People’s own experience in practicing meditation has been that it enhances sense of control and increase their enjoyment of day-to-day living. More importantly, they find slowly developing a sense of inner strength and peace that is stable. They begin to discover a place within themselves that is ever present, comforting, and renewing, despite the circumstances and continual ups and downs in their daily lives.


Meditation can be a bridge between Eastern and Western paths to well-being. It has an ancient scientific history as being the central means to well-being in the East and a more recent history of documented scientific study in the West. The current difference is that in Western science it is viewed primarily as a means to physical and mental well-being that has physically observable results. Eastern thought begins at a deeper, more subtle level of satisfaction.

From this perspective, the object of meditation is rooted in the spiritual plane. The results cannot be detected by the tools of a science based on physical observations. Indeed, we use the term ‘spiritual’ because the very thing we are describing is metaphysical rather than physical in its manifestation.

Clearly, we can find temporary pleasure in the things of the world. However, a stable sense of well-being can only be found within. Meditation is a practice that can lead to an inner sense of peace and tranquility, it costs nothing, it is portable and it is available under all conditions.

The effects of meditation on well-being have been described by Swami Lokeswarananda in ‘Practical Spirituality’:

If you practice meditation regularly and in a correct manner, you become your own master and cease to be the slave of circumstances that you are now.

Once we accept the great truth that ‘life is difficult’ and that we cannot find our happiness in the things of this world, we can transcend this predicament. The search for well-being is our human right. The secret is that the well-being we seek lies deep within ourselves. The key is to move away from external sources of happiness and toward the internal source of well-being that lies awaiting. The nature of this quest is spiritual as opposed to physical and it is a journey we must ultimately make alone.


-Excerpts from ‘Healthy Mind, Healthy Body- New Thoughts on Health’ 
A Vedanta Kesari Presentation (P149)
**************************************************************


இதைப் பாடினால் 
மூச்சு பயிர்ச்சி பிராணாயாமம்
செய்ததின் விளைவு இருக்கும்.

முத்தைத்தரு - Muthaitharu -  Thiruppugazh 
திருப்புகழ்  - திருவருணை Song


தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ……
தனதான.. . ..

பாடல் வரிகள்

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.




சொல் விளக்கம்

முத்தைத்தரு பத்தித் திருநகை … வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை … தேவயானை தேவியின் தலைவனே,

சத்திச் சரவண … சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர … மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு … என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து … வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் … (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண … முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு … ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது … ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக … ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய … நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் … பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே … பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர … தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி … நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி

திக்கொட்க நடிக்க … திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,

கழுகொடு கழுதாட … கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் … எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு … இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத … ‘தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக’
என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட … கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை … போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ … ‘குக்குக்குகு குக்குக் குகுகுகு’ என்ற ஓசையோடு
‘குத்திப் புதை, புகுந்து பிடி’ என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை … சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட … கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. … தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.




No comments:

Post a Comment