Showing posts with label Initiation - Mantra Diksha. Show all posts
Showing posts with label Initiation - Mantra Diksha. Show all posts

Friday, August 14, 2026

வழிகாட்டல் தியானம் - Guided Meditation for Students - 10 Minutes



தியானப் பயிற்சி
பாடசாலை மாணவர்களுக்கு

நமது வாழ்க்கையிலே அமைதி இருக்கிறது, ஆனந்தம் இருக்கிறது, நிறைவு இருக்கிறது. ஆனால் அது பூரணமாக இல்லை அவ்வப்பொழுது, கவலைகள் மனதை வாட்டுகின்றன. ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சலிப்புக்கள்,பெற்றார்,உறவினர்,நண்பர்களோடு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மனம் அமைதியை இழக்கின்றது. நாம் நினைப்பதை, எதிர்பார்ப்பதை, அவர்கள் செய்வதில்லை, நாம் நினைத்தபடி நடந்து கொள்வதில்லை. இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லாதது போல தெரிகிறது. ஆம் இது உண்மைதான். இதுதான் உலகத்தின் நியதி.

இன்பம், துன்பம், இரண்டும் கலந்துதான் உலக வாழ்க்கை.

இன்பத்தை அனுபவிப்பதை போல, துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் அதற்கு மனவலிமை தேவை. அந்த மன வலிமையை வளர்த்துக் கொள்வது வாழ்கையின் இன்றியமையாத அவசியமாகும்.

அதற்கான ஒரே வழி இறைவழிபாடு. இறை பக்தியை வளர்ப்பதன் மூலம், மனதிற்கு வலிமை பிறக்கிறது. வாழ்க்கை துன்பங்கள் லேசாகிவிடுகின்றன. அமைதி நிலைபெறுகின்றது.

இறைவழிபாட்டில் இரண்டு நிலைகள் உள்ளன.
  1. புற வழிபாடு, 
  2. அக வழிபாடு.

நாம் இப்போது ஆக வழிபாட்டிலே சிறிது ஈடுபடுவோம்.

01.ஆரம்ப ஏற்பாடுகள் ;

நேராக நிமிர்ந்து அமருங்கள். இமைகளை லேசாக மூடுங்கள்.உடலை இறுக்காதீர்கள் கைகளை கோர்த்த வண்ணம் அமருங்கள். உங்கள் உடல் முழுவதும் அமைதியில் ஆழ்ந்து இருப்பதை உணருங்கள். கை, கால்கள் உடல் முழுவதும் லேசாக உள்ளன. உங்கள் முகம் அமைதியில் மலர்ந்து இருக்கின்றது. உங்கள் உள்ளமும் எந்த சிந்தனையும் இன்றி சலனமற்று அமைதியாக உள்ளது. சாந்தி எங்கும் சாந்தி அந்த அமைதி நன்கு உணருங்கள் அந்த அமைதியில் அழ்ந்திருங்கள்…………………… (சில வினாடிகள் போகட்டும்)

02.ஓங்கார உபாசனை ;

இப்பொழுது ஓங்கார உபாசனை செய்வோம். முதலில் நன்றாக மூச்சை இழுக்கவும். பின்னர் மிக நிதானமாக ஓம் என்று கூறவும். ஓங்காரத்தை நீட்டிக் கூறவும். ஓம் என்று கூறுவதை இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். “ஓ”என்று ஆரம்பித்து சில வினாடிகள் சென்றபின் “ம்” என்று உதடுகளை மூடி நீட்டி கூறவேண்டும். இவ்வாறு பத்து தடவைகள் கூறவும். ஒவ்வொருவருக்கும் உங்கள் மனதில் அமைதி நம்புவதாக உணருங்கள். சில வினாடிகள் அந்த அமைதியில் ஆழ்ந்திருங்கள்.

03.சுவாசப்பயிற்சி ;

இப்பொழுது சுவாச பயிற்சி. உங்களது சுவாசத்தை கவனியுங்கள். சீரான ஓட்டம், சுவாசம் இரண்டு கட்டங்களில் நடைபெறுகின்றது. காற்று உள்ளே சென்று வெளியேறுகின்றது. இரண்டு நாசிகளில் ஊடாக சுவாசம் நடைபெறுகின்றது. சுவாசத்தை நன்கு கவனியுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒழித்து சுவாசத்தை கவனியுங்கள். நாசித் துவாரங்கள் வழியே காற்று உள்ளே செல்கிறது. நுரையீரல்களை அடைகின்றது. திரும்பவும் வெளியேறுகின்றது. ஒவ்வொரு சுவாசத்திற்கும் மனதில் அமைதி நிலை பெறுவதாக உணருங்கள். சில நிமிடங்களில் இந்த பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.

04. மானச பூசை;

இப்பொழுது மானச பூசை. உங்கள் இதயத்தில் பிரகாசமான ஒளியை காணுங்கள்.

எங்கும் ஒளி. கண்ணைப் பறிக்கும் ஒளி. அந்த ஒளியின் மத்தியில்

ஒரு அழகான தாமரை. நன்கு மலர்ந்த, நறுமணம் கொண்ட மலர். சிவப்பு நிறத்தில் நன்கு விரிந்த தாமரை. அதன் மென்மையான இதழ்களை உணருங்கள்…….

அந்த நறுமலரில், நீங்கள் தினசரி வழிபாடும் உங்கள் இஷ்ட தெய்வம் அமர்ந்திருப்பதை காணுங்கள்…. ஒளிபொருந்திய தேகம்……

அன்பும் அருளும் நிறைந்த திருமுகம்….. சச்சிதானந்த சொரூபம்…..

நம்முடைய இருப்பின், வாழ்க்கையின், அனைத்து இயக்கங்களுக்கும் காரணகர்த்தா… அவரை வணங்குங்கள்… மனதார வணங்குங்கள்… அன்போடு, பக்தி சிரத்தையுடன் வணங்குங்கள்… மலர் அஞ்சலி செய்யுங்கள்…

அந்த இறைவனை தியானம் செய்யுங்கள்… அவரது சாந்நித்தியத்தைப் பூரணமாக உணருங்கள். அவர் நமக்கு வெகு அண்மையில் உள்ளார். நம்மோடு எப்போழுதும் உள்ளார். அந்த இறை உணர்வில் சில வினாடிகள் மூழ்கியிருங்கள்….

பிரார்த்தனை செய்யுங்கள்… மனமுருகிப் பிரார்த்தியுங்கள்…

நிலையற்ற இந்த உலகின் பிடியில் இருந்து விலகப் பிரார்த்தியுங்கள்.

இறைவனது சாந்நித்தியம், அந்த இறை உணர்வு உங்கள் உள்ளும் புறமும் நன்கு வியாபித்து இருப்பதாக உணருங்கள்…

அந்த தூய்மையை அருளை உணருங்கள்……… (சில வினாடிகள்)

உங்கள் உடல் மனது தூய்மை அடைந்துள்ளது. மனது வலிமை பெற்றுள்ளது… கவலை, பயம், சோர்வு நீங்கி, மனம் தெளிவு, பெற்றுள்ளது.

நிறைவு;

இப்பொழுது உங்கள் மானச பூசையை நிறைவு செய்யுங்கள்.
 
ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி

-----------------------------------------------------------------------------------------------
-உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அழியாத உண்மைப் பொருள் இருக்கிறது. இந்தப் பொருளுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. தானே தானாக நிற்கும் இது எங்கும் நிறைந்தது, ஏனெனில் இதற்கு உருவம் இல்லை. உருவமோ வடிவமோ இல்லாதது, காலம் மற்றும் இடத்தால் எல்லைப்படுத்தப் படாதது, அது எங்கும் இருக்கிறது; அனைவரிடமும் சமமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

· ஒவ்வொருவரும் எல்லையற்ற அறிவின் இருப்பிடம்; அழிவற்ற ஆனந்தத்தின் இருப்பிடம்; அழியாத் தன்மையின் இருப்பிடம்.

சுவாமி விவேகானந்தர்


********************************************************
“Children of Immortal Bliss”
is a phrase that Swami Vivekānanda used frequently,
quoting from the Svétashwatara Upanishad

Hear ye, children of immortal bliss.
even ye that resides in Higher spheres!
I have found the Ancient One, blazing like the sun, beyond all darkness.
knowing Him alone you shall be saved from death over again.

Shrinwantu vishwe amritasya putra
ā ye dhāmāni divyāni tasthu
Vedām ayetām purusham mahantam
āditya varanam tamasā parasthāh
Tvameva vidhithva atimrityu meti,
nānyah pantha vidyathe ayanāya


பெரியவர்களுக்கு - 
மேலதிக விளக்கங்கள்




5 Minute Meditation


Guided Meditation  - Some more information


***********************************************************

 மந்திரம்: ஓம்  -  சொல்லும் பொருளும்
சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள் 1.6.3(vii)

ஓங்காரம் முழுமுதற் பொருளின் வேறுபாடற்ற வடிவத்தைக் குறிப்பதுபோல், மற்ற மந்திரங்கள் அதே பிரம்மத்தின் தனித்தனியான இயல்புகளைக் குறிக்கின்றன. இவை எல்லாமே இறைவனைப்பற்றி தியானம் செய்யவும் உண்மையறிவை அடையவும் உதவியாக இருக்கின்றன.
***********************************************************


 
Sri Ramakrishna Mahamantra Chanting
ஸ்ரீ இராமகிருஷ்ண மஹா மந்திரம் ஜபித்தல்






Meditation Leads to Freedom

-Excerpts from ‘Healthy Mind, Healthy Body- New Thoughts on Health’ 
A Vedanta Kesari Presentation (P149)

Swami Turiyananda writes about meditation as a source of freedom from the world-based emotions that hold us in bondage:

Happiness and misery alternate in this world. Have you ever seen anyone completely free from them? It is impossible; this world is made up of pairs of opposites. By meditating on the Atman one can get rid of them. This does not mean that there will be no happiness or misery, but by God’s grace they won’t be able to perturb one.

Thus, meditation is essential in overcoming the undependable nature of what the world offers and developing a more consistent and enduring sense of well-being.

People’s own experience in practicing meditation has been that it enhances sense of control and increase their enjoyment of day-to-day living. More importantly, they find slowly developing a sense of inner strength and peace that is stable. They begin to discover a place within themselves that is ever present, comforting, and renewing, despite the circumstances and continual ups and downs in their daily lives.


Meditation can be a bridge between Eastern and Western paths to well-being. It has an ancient scientific history as being the central means to well-being in the East and a more recent history of documented scientific study in the West. The current difference is that in Western science it is viewed primarily as a means to physical and mental well-being that has physically observable results. Eastern thought begins at a deeper, more subtle level of satisfaction.

From this perspective, the object of meditation is rooted in the spiritual plane. The results cannot be detected by the tools of a science based on physical observations. Indeed, we use the term ‘spiritual’ because the very thing we are describing is metaphysical rather than physical in its manifestation.

Clearly, we can find temporary pleasure in the things of the world. However, a stable sense of well-being can only be found within. Meditation is a practice that can lead to an inner sense of peace and tranquility, it costs nothing, it is portable and it is available under all conditions.

The effects of meditation on well-being have been described by Swami Lokeswarananda in ‘Practical Spirituality’:

If you practice meditation regularly and in a correct manner, you become your own master and cease to be the slave of circumstances that you are now.

Once we accept the great truth that ‘life is difficult’ and that we cannot find our happiness in the things of this world, we can transcend this predicament. The search for well-being is our human right. The secret is that the well-being we seek lies deep within ourselves. The key is to move away from external sources of happiness and toward the internal source of well-being that lies awaiting. The nature of this quest is spiritual as opposed to physical and it is a journey we must ultimately make alone.

 

Friday, July 4, 2025

Guru Purnima on 10-07-2025 - Ramakrishna Mission Colombo.

 


Homa & Bhajan - 

Sri Ramakrishna Nama Sangeerthanam

பஞ்ச மகாயக்ஞம் 
இராமகிருஷ்ணா மிஷன், கொழும்பு,
 ஊடாக செயும் வசதி

Swami Sarvapriyananda Explains!






Dhyana mulam Gurur murtim
Puja mulam, Gurur padam
Mantra mulam, Gurur vakyam
Moksha mulam, Gurur kripa

The root of meditation is in the form of the Guru
The roots of worship are the Lotus Feet of the Guru
The roots of the Mantra are the words of the Guru
The root of liberation is the grace of the Guru

குரு வந்தனம்


Guru Purnima 2025 |
Blessings by Swami Gautamananda ji Maharaj 

குரு பூர்ணிமா அகண்ட நாமஜபம் செய்வதன் மூலம் குருவின் ஆசிர்வாதம், மன அமைதி, ஆன்மீக வளர்ச்சி, துன்பங்கள் நீங்குதல் போன்ற எல்லா நலன்களும் கிடைக்கும்.


திருமூலர் திருமந்திரம்
முதல் தந்திரம், பத்தாம் திருமுறை


யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

Meaning:

It is for all, (to offer) a green (fresh) leaf to God.
It is for all, (to provide) a mouthful of food for the cows
It is for all, (to donate) one handful of food when eating,
It is for all, (to speak) pleasant words to others.

இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை; எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். கோபூசை செய்ய வேண்டும் என்பதில்லை, பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை; உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்துப் புகழ்ந்துரை செய்து முதுகு சொறிய வேண்டும் என்பதில்லை; யாருக்கும் இன்னுரை சொன்னாலே போதும் என்று எல்லார்க்கும் இயல்கிற வழிமுறை சொல்கிறார் திருமூலர்.

Various Types of Yajnas: 4.28 to 4.31
Shrimad Bhagavad Gita:
नरदेव देव जय जय नरदेव
nara-deva deva jaya jaya nara-deva

Translation

From The Complete Works of Swami Vivekananda.

He who was Sri Rama, whose stream of love flowed with resistless might even to the Chandala (the out­caste); Oh, who ever was ENGAGED in doing good to the world though superhuman by nature, whose renown there is none to equal in the three worlds, Sita's beloved, whose body of Knowledge Supreme was covered by devo­tion sweet in the form of Sita.

He who quelled the noise, terrible like that at the time of destruction, arising from the battle (of Kuruk­shetra), who destroyed the terrible yet natural night of ignorance (of Arjuna) and who roared out the Gita sweet and appeasing; That renowned soul is born now as Sri Ramakrishna.

Hail, O Lord of Men! Victory unto You! I surrender myself to my Guru, the physician for the malady of Samsara (relative existence) who is, as it were, a wave rising in the ocean of Shakti (Power), who has shown various sports of Love Divine, and who is the great weapon to destroy the demon of doubt.

Hail, O Lord of Men! Victory unto you! I surrender myself to my Guru the Man-God, the physician for the malady of this Samsara (relative existence), whose mind ever dwelt on the non-dualistic Truth, whose personality was covered by the cloth of Supreme Devotion, who was ever active (for the good of humanity) and whose actions were all superhuman.

Hail, O Lord of Men! Victory unto You!



Avatar Varishthay Sri Ramakrishna Dev - Swami Nikhileswarananda

Sunday, February 9, 2025

Sri Lanka - Visit of Rev. Swami Suhitanandaji Maharaj 8th to 23rd February 2025.


 



Arrival at Ramakrishna Mission Colombo.

Full Programme


















Colombo - Programme

Jaffna Programme

Batticaloa Programme

Spiritual Initiation or Mantra Diksha

“Faith in the guru’s words. You should depend on his instruction. Do your duties in the world, holding fast to his words, like a person whirling round and holding fast to a pillar. One must not look on one’s guru as a mere human being: it is Satchidananda Himself who appears as the guru. When the disciple has the vision of the Ishta, through the guru’s grace, he finds the guru merging in Him.”  
    – Sri Ramakrishna Paramahamsa


In the Ramakrishna Order, in India, Only the Revered President Swamiji and the Vice-President Swamijis, initiate devotees into Spiritual Life. However, there are other Senior monks abroad who initiate. We recommend all interested spiritual aspirants to read a small booklet titled ‘Initiation’ (this book has been translated into various languages),by Swami Bhuteshanandaji Maharaj, the 12th President of the Ramakrishna Order. This book is available in almost all the centres of Ramakrishna Order.

Interested Devotees who are willing to obtain Mantra Diksha will have to complete reading the following books before filling the application:


 Minimum one volume is to be read:

1. Sri Ramakrishna – Life and Teachings

2. Sri Sarada Devi – Life and Teachings

3. Swami Vivekananda – His Life and Legacy

4. The Gospel of Sri Ramakrishna






Saturday, August 8, 2020

Repairs & Renovation - Universal Temple of Sri Ramakrishna

RAMAKRISHNA MISSION (Ceylon Branch )
40, Ramakrishna Road, Colombo 6
Phone – 0094 11 2588253
Fax - 0094 11 2361438
Email: rkmcey@gmail.com
Website : www.rkmceylon.org

  Repairs & Renovation

Crack is developing on the Boundary wall

 & Temple Building walls due to damage in the

sewage Canal  by the construction of an up stair building opposite to the temple.

 




Donations - By Bank Transfer  to  “Ramakrishna Mission, Colombo”.

Current A/c No. 009010001222

Hatton National Bank

Wellawatta Branch

SWIFT CODE: HBLILKLX

100, 102, Galle Road,  Colombo 6. Sri Lanka