Showing posts with label Guru Purnima. Show all posts
Showing posts with label Guru Purnima. Show all posts

Friday, July 4, 2025

Guru Purnima on 10-07-2025 - Ramakrishna Mission Colombo.

 


Homa & Bhajan - 

Sri Ramakrishna Nama Sangeerthanam

பஞ்ச மகாயக்ஞம் 
இராமகிருஷ்ணா மிஷன், கொழும்பு,
 ஊடாக செயும் வசதி

Swami Sarvapriyananda Explains!






Dhyana mulam Gurur murtim
Puja mulam, Gurur padam
Mantra mulam, Gurur vakyam
Moksha mulam, Gurur kripa

The root of meditation is in the form of the Guru
The roots of worship are the Lotus Feet of the Guru
The roots of the Mantra are the words of the Guru
The root of liberation is the grace of the Guru

குரு வந்தனம்


Guru Purnima 2025 |
Blessings by Swami Gautamananda ji Maharaj 

குரு பூர்ணிமா அகண்ட நாமஜபம் செய்வதன் மூலம் குருவின் ஆசிர்வாதம், மன அமைதி, ஆன்மீக வளர்ச்சி, துன்பங்கள் நீங்குதல் போன்ற எல்லா நலன்களும் கிடைக்கும்.


திருமூலர் திருமந்திரம்
முதல் தந்திரம், பத்தாம் திருமுறை


யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

Meaning:

It is for all, (to offer) a green (fresh) leaf to God.
It is for all, (to provide) a mouthful of food for the cows
It is for all, (to donate) one handful of food when eating,
It is for all, (to speak) pleasant words to others.

இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை; எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். கோபூசை செய்ய வேண்டும் என்பதில்லை, பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை; உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்துப் புகழ்ந்துரை செய்து முதுகு சொறிய வேண்டும் என்பதில்லை; யாருக்கும் இன்னுரை சொன்னாலே போதும் என்று எல்லார்க்கும் இயல்கிற வழிமுறை சொல்கிறார் திருமூலர்.

Various Types of Yajnas: 4.28 to 4.31
Shrimad Bhagavad Gita:
नरदेव देव जय जय नरदेव
nara-deva deva jaya jaya nara-deva

Translation

From The Complete Works of Swami Vivekananda.

He who was Sri Rama, whose stream of love flowed with resistless might even to the Chandala (the out­caste); Oh, who ever was ENGAGED in doing good to the world though superhuman by nature, whose renown there is none to equal in the three worlds, Sita's beloved, whose body of Knowledge Supreme was covered by devo­tion sweet in the form of Sita.

He who quelled the noise, terrible like that at the time of destruction, arising from the battle (of Kuruk­shetra), who destroyed the terrible yet natural night of ignorance (of Arjuna) and who roared out the Gita sweet and appeasing; That renowned soul is born now as Sri Ramakrishna.

Hail, O Lord of Men! Victory unto You! I surrender myself to my Guru, the physician for the malady of Samsara (relative existence) who is, as it were, a wave rising in the ocean of Shakti (Power), who has shown various sports of Love Divine, and who is the great weapon to destroy the demon of doubt.

Hail, O Lord of Men! Victory unto you! I surrender myself to my Guru the Man-God, the physician for the malady of this Samsara (relative existence), whose mind ever dwelt on the non-dualistic Truth, whose personality was covered by the cloth of Supreme Devotion, who was ever active (for the good of humanity) and whose actions were all superhuman.

Hail, O Lord of Men! Victory unto You!



Avatar Varishthay Sri Ramakrishna Dev - Swami Nikhileswarananda

Tuesday, July 1, 2025

Swami Vivekananda & Yogaswami

Yogaswami's Darshan of Vivekananda


The year 1897 was very significant in Yogaswami’s life. It appears that Swamigal quit His job at the end of that year and returned to Jaffna. He was about twenty-five years of age at that time. It was a period when Swamigal was advancing systematically in spiritual life. Swami Vivekananda came to Sri Lanka in January 1897. A reception procession was given to him in Jaffna on 24-01-1897 and Yogaswami took part in that reception. The procession started from Chavakachcheri and ended in the Jaffna Hindu College. Yoga Swami participated in that procession.



Devotion to the End

Yogar Swamigal used to describe with great enthusiasm, in later years, about the way Vivekananda delivered his speech in the specially constructed dais after the procession reached Hindu College. Swamigal said that Vivekananda walked criss-cross both ends of the stage and began his speech with the words, “The subject is large but the time is short.”

Yogar Swamigal saw Siva in Swami Vivekananda - As Avatara.

He said that Vivekananda’s bright and electrified eyes enchanted the audience. Yogar Swamigal had great respect and devotion for Ramakrishna Paramahamsar and Vivekananda till to the end. Swamigal made arrangement to translate the book, “In the Hours of Meditation” written by Vivekananda’s disciple, Alexander in 1925. This was the first publication which was published under Swamigal supervision. Later in 1955 Swamigal arranged for publications of small-size books on the “Essence of orations of Swami Vivekananda” as Sivathondan publication.

Yogar Swamigal had special respect for the monks of Ramakrishna Mission. 
Swamigal had issued directives that whoever hailed from the Mission, they should be received in full respect in the Sivathondan Nilayam. Moreover, Swamigal had supported and blessed Swami Vipulanandar when he wanted to become a monk in the Ramakrishna Mission. Swamigal gave the first donation to the students’ Orphan Home in Mattakaluppu, which was originally started in Jaffna by Ramakrishna Mission.

 Yogaswami Overview and Significance


Swami Vipulananda & Swami Asangananda meeting Yogaswami - Light of Jaffna

 Life History  Courtesy: Hinduism Today


Yogaswami: The Strange Saint of Sri Lanka






Yoga Swami by Sam Wickramasinghe

Yogaswami had four sayings, which he repeated to most people who came to see him. They were known as the Maha Vakyas. These were interpreted by many in different ways according to each one's level of understanding, because they contained truths at various levels of application—some very profound on the metaphysical level.

These sayings were:
  1. Everything has been perfected long ago;
  2. Nothing is wrong in anything;
  3. I know nothing; and
  4. All is truth.


பிற்கால ஈழத்து சித்தர் பரம்பரை முன்னோடி  கடையிற் சுவாமிகள் 

கடையிற் சுவாமி -செல்லப்பா சுவாமி -யோகர் சுவாமி
        
கடையிற் சுவாமிகள் வாழ்ந்த காலம் கி.பி 1810-1875.
 
கடையில் சுவாமிகள் யோக சுவாமிகளின் குரு, செல்லாப்ப சுவாமிகளின் குரு  ஆவார். 

இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும். யாழ்ப்பாணம், பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.  

வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.

யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது. ஆதிகடைநாதன் என்றும் அழைக்கப் படுகிறார் 

ஆதிகடைநாதன் என்று மிகுந்த அன்புடன்  கொண்டாடப்படும் யாழ்ப்பாணம் கடையிற்-சுவாமிகள் இலங்கையில் ஒரு அருட்பரம்பரைக்கு மூலவித்திட்ட குரு முதல்வராவார்.

இத்தவ சிரேஷ்டர், கன்னட தேசத்தவர்; யாழ்ப்பாணம் வருமுன்னர், சுவாமி முக்தியானந்தா என்ற  நாமம் உடையவர். தமிழ் ,ஆங்கிலம், வடமொழி, கன்னடம ஆகிய நான்கு மொழிகளையும் பயின்றவர். உயர்ந்த உத்தியோகமான நீதிபதி தொழில் இல்  இருந்து திடீரென ஏற்பட்ட வைராக்கியம் காரணமாக, அதனை உதறிவிட்டுத் துறவு பூண்டவர் .மைசூரைச் சேர்ந்த இம்மகானுக்கு, ஞானோபதேசம் அருளிய குரு மைசூர் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரிய பீடத்தில் 32ஆவது தலைவராக வீற்றிருந்து, 1817ஆம் ஆண்டு தொடக்கம், 1879ஆம் ஆண்டு வரையில், அருட்செங்கோலோச்சிய அற்புத ஞானசித்தர் நரசிம்ம பாரதிஆவார் .

கடையிற் சுவாமிகளுடைய ஈழத்தின் முதல் சீடரும், யாத்திரை செய்தபோது அவரைத் தென்னாட்டில் தரிசித்து ஆசி பெற்றவருமான வண்ணார்பண்ணை வைரமுத்துச் செட்டியார் அவர்களே குறித்த மகானின் யாழ்ப்பாண வருகைக்குத் துணைக்காரணமானவர்.

யாழ்ப்பாணப் பெரிய கடை  அண்மையில் சாமிகள் வாழ்ந்தாலும்  அப்பொழுது பலருக்கு அவரின் மகிமை தெரியாதகாலம் ,
ஒரு கன்னடக்காரன்  வை ரவச் செட்டியார் இந்தியாவில் இருந்து கூட்டிக் கொண்டு வந்தவர்  இருக்கிறார் என்பது தான் அப்போதைய பேச்சு .
சாமிகளுக்கு பசித்தபோதேல்லாம்  சுவாமிகள் வீடு தேடிச்சென்று உணவு கேட்டருந்தியது, திரு வைரமுத்துச் செட்டியார் மனையிலாகும்.

வைரமுத்துச் செட்டியார்  சுவாமிகளின்  பழைய தொண்டர்.

 இவரின் குருபக்தியின் சின்னமாகப் பின்னாளில் உண்டாக்கப்பட்டதே  கந்தர்மட அன்னசத்திரம். 

முப்பது ஆண்டளவு யாழ்ப்பாண மக்களுக்கு அல்லல் களைந்து, அளப்பரும் , ஞானகுரு பரம்பரைக்கு வித்திட்ட இந்த மகான் , கர வருடம், புரட்டாசி மாதத்தில் பூரணையும் பூரட்டாதி நட்சத்திரமும் பொருந்திய 1881 ஆம் ஆண்டில் புண்ணிய வேளையில் மகாசமாதியடைந்தனர்

சுவாமிகளுடைய சமாதிக் கோயில் வண்ணார்பண்ணை நீராவியடியில் உள்ளது.இவ்வாலயத்தின் மூலமூர்த்தியான சிவலிங்கப் பெருமான், ஸ்ரீ வாலாம்பிகை சமேத வைத்தியநாதன், கடையிற் சுவாமிகள் மற்றும் பரிவார மூர்த்திகள்  உள்ளன தனது இறுதி வாழ்நாளைக் கழித்துக் கடந்த-1881 ஆம் ஆண்டில் கடையிற் சுவாமிகள் சமாதியடைந்த இடத்தில் 1900 ஆம் ஆண்டில் சிவன் கோயிலுக்குரிய சகல பரிமாணங்களுடனும் கடையிற்சுவாமிகள் சமாதிச் சிவாலயம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சம்.

கடையிற் சுவாமிகளுக்குச் சீடராக குழந்தைவேலுச்சுவாமிகள், வைரமுத்துச் செட்டியார், சின்னச் சுவாமி, நன்னையார், சடைவரதர், செல்லப்பாச் சுவாமி,சார்ஷன் சுவாமி எனப் பலரும் இருந்தார்கள் .


******************************************************************************

Swami Vivekananda (January 12, 1863 – July 4, 1902) is considered as one of the most influential spiritual educationist and thinker of India. He was disciple of Ramakrishna Paramahamsa and was the founder of Ramakrishna Math and Ramakrishna Mission.

He is considered by many as an icon for his fearless courage, his positive exhortations to the youth, his broad outlook to social problems, and countless lectures and discourses on Vedanta philosophy.

“The Swami’s mission was both national and international. A lover of mankind, he strove to promote peace and human brotherhood on the spiritual foundation of the Vedantic Oneness of existence.

Tuesday, July 4, 2023

Guru Purnima - 03-07-2023


 


Ramakrishna Mission Ashrama -Colombo.


*************************************************

எங்கள் குருநாதன்  பாடல் 

 தவத்திரு சிவயோக சுவாமிகள் எழுதியது 


என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன்

அன்னைபிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்
அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன்
முன்னைவினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்
நன்மைதீமை யறியாதா னெங்கள்குரு நாதன்
நான்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன். 1


தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்
சித்தத்திற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன்
மோகத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்
முத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன்
வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள் குருநாதன்
சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன். 2


வாசியோகந் தேரென்றா னெங்கள்குரு நாதன்
வகாரநிலை அறியென்றா னெங்கள்குரு நாதன்
காசிதேசம் போவென்றா னெங்கள்குரு நாதன்
கங்குல்பக லில்லையென்றா னெங்கள்குரு நாதன்
நாசிநுனி நோக்கென்றா னெங்கள்குரு நாதன்
நடனந்தெ ரியுமென்றா னெங்கள்குரு நாதன்
மாசிலோசை கேட்குமென்றா னெங்கள்குரு நாதன்
மற்றுப்பற்றை நீக்கென்றா னெங்கள்குரு நாதன். 3


இருவழியை அடையென்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம் விளங்குமென்றா னெங்கள்குரு நாதன்
கருவழியைக் கடவென்றா னெங்கள்குரு நாதன்
கட்டுப்படும் மனமென்றா னெங்கள்குரு நாதன்
ஒருவரும றியாரென்றா னெங்கள்குரு நாதன்
ஓங்கார வழியென்றா னெங்கள்குரு நாதன்
நிருமலனா யிருவென்றா னெங்கள்குரு நாதன்
நீயேநா னென்றுசொன்னா னெங்கள்குரு நாதன். 4


திக்குத் திகாந்தமெல்லா மெங்கள்குரு நாதன்
சித்தத்துள் நிற்கவைத்தா னெங்கள்குரு நாதன்
பக்குவமாய்ப் பேணென்றா னெங்கள்குரு நாதன்
பார்ப்பதெல்லாம் நீயென்றா னெங்கள்குரு நாதன்
அக்குமணி யணியென்றா னெங்கள்குரு நாதன்
அஞ்செழுத்தை ஓதென்றா னெங்கள்குரு நாதன்
நெக்குநெக் குருகென்றா னெங்கள்குரு நாதன்
நித்தியன்நீ யென்றுசொன்னா னெங்கள்குரு நாதன். 5


தேடாமல் தேடென்றா னெங்கள்குரு நாதன்
சீவன் சிவனென்றா னெங்கள்குரு நாதன்
நாடாமல் நாடென்றா னெங்கள்குரு நாதன்
நல்லவழிதோன்றுமென்றா னெங்கள்குரு நாதன்
பாடாமற் பாடென்றா னெங்கள்குரு நாதன்
பத்தரினஞ் சேரென்றா னெங்கள்குரு நாதன்
வாடாமல் வழிபடென்றா னெங்கள்குரு நாதன்
வையகத்தில் வாழென்றா னெங்கள்குரு நாதன். 6


தித்திக்கு மொருமொழியா லெங்கள்குரு நாதன்
சின்மயத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன்
எத்திக்கு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம்நீ யென்றுரைத்;தா னெங்கள்குரு நாதன்
வித்தின்றி நாறுசெய்வா னெங்கள்குரு நாதன்
விண்ணவரு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்
தத்துவா தீதனானா னெங்கள்குரு நாதன்
சகலசம் பத்துந்தந்தா னெங்கள்குரு நாதன். 7


ஆதியந்த மில்லையென்றா னெங்கள்குரு நாதன்
அதுவேநீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
சோதிமய மென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்
சுட்டிறந்து நில்லென்றா னெங்கள்குரு நாதன்
சாதி சமயமில்லா னெங்கள்குரு நாதன்
தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன்
வாதியருங் காணவொண்ணா னெங்கள்குரு நாதன்
வாக்கிறந்த இன்பந்தந்தா னெங்கள்குரு நாதன். 8


முச்சந்திக் குப்பையிலே னெங்கள்குரு நாதன்
முடக்கிக் கிடந்திடென்றா னெங்கள்குரு நாதன்
அச்சமொடு கோபமில்லா னெங்கள்குரு நாதன்
ஆணவத்தை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
பச்சைப் புரவியிலே எங்கள்குரு நாதன்
பாங்காக ஏறென்றா னெங்கள்குரு நாதன்
தச்சன்கட்டா வீட்டிலே எங்கள்குரு நாதன்
தாவுபரி கட்டென்றா னெங்கள்குரு நாதன். 9


நாமேநா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
நமக்குக்குறை வில்லையென்றா னெங்கள்குரு நாதன்
போமேபோம் வினையென்றா னெங்கள்குரு நாதன்
போக்கவர வில்லையென்றா னெங்கள்குரு நாதன்
தாமேதா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
சங்கற்ப மில்லையென்றா னெங்கள்குரு நாதன்
ஓமென் றுறுதிதந்தா னெங்கள்குரு நாதன்
ஊமையெழுத் தறியென்றா னெங்கள்குரு நாதன். 10